கலஹா கண்டி பிரதான வீதியில் கலஹாகுறுப் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டி மேல் பய்னஸ் மரம் முறிந்து விபத்து.
கண்டி கலஹா பிரதான வீதியில் இந்த சம்பவம் ஏற்ப்பட்டுள்ளது.
கலஹாவில் உள்ள சன்முகா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவனை முச்சக்கரவண்டியில் தந்தை ஏற்றி கொண்டு வீட்டுக்கு செல்லும் போது பாரிய பய்னஸ் மரம் முறிந்து முச்சக்கரவண்டி மேல் விழுந்துள்ளது,
இதில் பயணித்த தந்தையும் மகனும் தெய்வாதீனமாக உயிர் தப்பித்தனர்.,
இதனால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளதோடு இதற்கு முன் இந்த பிரதான வீதியில் பஸ் மீதும் மரம் முறிந்து விழ்ந்த சம்பவம் பதிவாகி இருந்துள்ளது.பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பிரதான வீதி அருகில் உள்ள பாதுகாப்பற்ற மரங்களை உடனடியாக அகற்றி தறுமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டு கொள்கின்றனர் .
மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
