Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

July 31, 2026

 குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

July 31, 2026

இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை கடற்பகுதியில் கப்பல்கள் மூலம் எரிபொருள் கசிவுகளை கண்காணிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவை
இலங்கை

இலங்கை கடற்பகுதியில் கப்பல்கள் மூலம் எரிபொருள் கசிவுகளை கண்காணிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவை

ThanaBy ThanaFebruary 28, 2023Updated:February 28, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கைக் கடற்பகுதியில் கப்பல்களால் ஏற்படும் எரிபொருள் கசிவைக் கண்காணிப்பதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவையை ஆரம்பிப்பதற்கான அமைச்சுப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

 

இது தொடர்பான திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்நாட்டிற்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எண்ணெய் கசிவு கண்காணிப்பு சேவை முதலில் குறுகிய கால முன்னோடி திட்டமாக தொடங்கப்பட உள்ளது. அதற்காக பிரான்ஸ் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சு 601,810.00 யூரோக்களை மானியமாக வழங்குவதாகவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவையை ஒரு வருடத்திற்கு நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சேகரிக்கப்பட்ட உள்ளூர்மயமாக்கல் செயற்கைக்கோள்கள் Collected Localization Satellite (CLS) மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் செய்யவும் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய பெருங்கடலில் மூலோபாய ரீதியான முக்கியமான இடம் ஒன்றில் அமைந்துள்ளது.. நாட்டின் தெற்கு கடற்கரை வழியாக ஒரு நாளைக்கு 300 – 350 கப்பல்கள் செல்வதால், நாட்டின் கடலோர நீரில் கடல் போக்குவரத்து செறிவு அதிகமாக உள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதார வலயத்தின் ஊடாக வருடாந்தம் 525 மில்லியன் மெற்றிக் தொன் எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, கடல் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு பெரிய அளவிலான கப்பல் விபத்துக்கள் (MV Express Pearl மற்றும் MV New Diamond) மற்றும் பல சிறிய அளவிலான எரிபொருள்கள் இலங்கையின் கடற்பரப்பில் கசிந்துள்ளன.

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எரிபொருள் கசிவுகளுக்கான கண்காணிப்பு சேவையை நிறுவுதல், எரிபொருள் கசிவுகளை தாமதமின்றிக் கண்டறிதல், கப்பல் தொடர்பான எண்ணெய் கசிவுகளை கண்காணிப்பதன் மூலம் சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அபாயங்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான விளைவுகளை குறைப்பதன் மூலம் இலங்கையின் கடற்கரையை பாதுகாத்தல். இலங்கையின் கரையோரப் பகுதியில் ஒரு இயந்திரத்தை நிறுவுதல், எண்ணெய் கசிவுகளின் நகர்வை அடையாளம் காண்பது, அந்த மாசுபடுத்துபவர்களுக்கு எதிரான உடனடி நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் சட்ட அ முலாக்க முறைகளை மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் முதன்மை நோக்கங்களாகும்.

இலங்கையில் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக அபிவிருத்தியின் வளர்ச்சியுடன் இலங்கையின் கடற்கரையில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

எனவே, எரிபொருள் கசிவுகள் பற்றிய தகவல்களை விரைவாகப் பெறுவதற்கான அமைப்பை ஏற்படுத்துவதன் மூலமும், கப்பல்களால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க விரைவான நடவடிக்கை எடுப்பதன் மூலமும், மாசுபாட்டிற்கு காரணமான கப்பல்களைக் கண்டறிவதன் மூலமும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிதாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

    July 31, 2026

     குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    July 31, 2026

    இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை

    July 31, 2026

    பூனாகலை – பண்டாரவளை பிரதான வீதி புனரமைப்பு: எழும் மண் தூசியால் மக்கள் பெரும் அவதி!

    July 31, 2026
    Editors Picks

    தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

    July 31, 2026

     குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    July 31, 2026

    இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை

    July 31, 2026

    பூனாகலை – பண்டாரவளை பிரதான வீதி புனரமைப்பு: எழும் மண் தூசியால் மக்கள் பெரும் அவதி!

    July 31, 2026

    தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

    July 31, 2026

     குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    July 31, 2026

    இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.