கொட்டகலை பிரதேச சபைக்குரிய நூலக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் (06) ஒன்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையின் கீழ் சபைப் பணிமனையில் இடம்பெற்றது.
இதன்போது கொட்டகலை மற்றும் வட்டகொடை பொது நூலகத்தினை அபிவிருத்தி செய்தல், நூலக அங்கத்துவத்தை அதிகரித்துக்கொள்ளல், கொட்டகலை இ- நெணபியச கணினிக் கற்கைப்பிரிவு நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் விஜேசுந்தரம் அவர்கள், நூலக பொறுப்பதிகாரி திருமதி சமரக்கோன் அவர்கள், நூலக உதவியாளர்களான செல்வி மதிவதனா, செல்வி கௌஷனா மற்றும் செல்வி ரம்யாஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
