Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

July 18, 2026

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 18, 2026

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

July 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கல்வித் துறையில் கால்பதிக்கும் ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ்!*
இலங்கை

கல்வித் துறையில் கால்பதிக்கும் ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ்!*

ThanaBy ThanaJuly 9, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*கல்வித் துறையில் கால்பதிக்கும் ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ்!*

 

விவசாயம், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளில் தடம் பதித்துள்ள முன்னணி வணிகக் குழுமமான ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ், தற்போது தனது வணிக எல்லையை கல்வித் துறைக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இதற்கமைய, அதன் புதிய கல்வி நிறுவனமான ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் டிப்ளமசி’ (Institute of International Diplomacy) அண்மையில் கொழும்பு கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் மிக விமரிசையாக நடைபெற்ற மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாட்டின் போது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

ஏ.எச்.சி குழுமத்தின் தலைவரும், அமைதித் தூதுவருமான கலாநிதி நாலக சில்வா, இந்த சர்வதேச இராஜதந்திரக் கல்வி நிறுவனத்தினதும் ஸ்தாபகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த புதிய கல்வி நிறுவனத்தின் மூலம் சர்வதேச இராஜதந்திர உறவுகள், மானிடவியல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம், கணினி குற்றவியல் சட்டம், சட்டக் கல்வி, விவசாய மேம்பாடு அத்துடன் கலை மற்றும் கலாசார மேம்பாடு ஆகிய முக்கிய பாடப்பரப்புகள் கற்பிக்கப்படவுள்ளதாக கலாநிதி நாலக சில்வா தெரிவித்துள்ளார்.

போட்டித்தன்மை நிறைந்த தற்போதைய கல்விச் சூழலில் உள்ள சவால்களுக்கு மத்தியில், தாம் புதிதாக ஆரம்பித்துள்ள இந்த கல்வி நிறுவனம் இன்றைய இளந்தலைமுறையினருக்கும் பெரியவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்த அவர், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்தே அனைத்து பாடநெறிகளும் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, இக்கல்வி நிறுவனம் ஊடாக தொழில்முறை சான்றிதழ் பாடநெறிகள், டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமாக்கள், பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், முதுகலை டிப்ளோமாக்கள் (PGD), முதுதத்துவமாணி (Master’s) பாடநெறிகள் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் (PhD) எனப் பல மட்டங்களிலான சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

 

நீங்கள் ஒரு சிறந்த நிபுணராக, தொழில்முனைவோராக, கல்வியாளராக, அரச அதிகாரியாக அல்லது ஒரு தலைவராக வர விரும்பினாலும், பொதுமக்கள் மத்தியில் சிறந்த ஆளுமைகளை உருவாக்குவதற்கு சர்வதேச இராஜதந்திரக் கல்வி நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் கலாநிதி நாலக சில்வா மேலும் சுட்டிக்காட்டினார்.

 

அத்துடன், சர்வதேச ரீதியில் வடிவமைக்கப்பட்ட இந்த கல்வித் திட்டங்களின் ஊடாக, இங்கு பயிலும் மாணவர்களின் தொழில்முறை மேம்பாடு, புதிய நிபுணத்துவ திறன்கள் மற்றும் தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சி என்பவற்றுடன் உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மகத்தான வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையின் கல்வித் துறையில் புதியதொரு மைல்கல்லாக அமைந்த இந்த பிரம்மாண்ட அறிமுக விழாவில், மனித உரிமை மேம்பாட்டுக்கான சர்வதேச குரல் அமைப்பின் தலைவர் ரகு இந்திரகுமார், பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவரும், 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியின் நட்சத்திர வீரருமான குமார் தர்மசேன, வெளிநாட்டு தூதுவர்கள், முன்னணி வர்த்தகர்கள், பிரபல திரைக்கதை எழுத்தாளர் புத்திக சேமசிங்க உள்ளிட்ட கலைத்துறைப் பிரபலங்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026

    மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!

    July 18, 2026
    Editors Picks

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026

    மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!

    July 18, 2026

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.