Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக “சரசவி திரியோ அபிமன்” கல்வி உதவித் திட்டம்: ஜூலை 11-ல் ஆரம்பம்

July 9, 2026

காலி மஹமோதர மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகங்களில் புதிய சிறைச்சாலைகள்! – நீதி அமைச்சர் வர்த்தமானி வெளியீடு

July 9, 2026

கல்வித் துறையில் கால்பதிக்கும் ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ்!*

July 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காலி மஹமோதர மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகங்களில் புதிய சிறைச்சாலைகள்! – நீதி அமைச்சர் வர்த்தமானி வெளியீடு
Breaking

காலி மஹமோதர மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகங்களில் புதிய சிறைச்சாலைகள்! – நீதி அமைச்சர் வர்த்தமானி வெளியீடு

ThanaBy ThanaJuly 9, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடியைக் குறைப்பதற்கும், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காலி – மஹமோதர மற்றும் பழைய போகம்பரை ஆகிய இடங்களில் புதிய சிறைச்சாலைகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

​

காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் கடந்த 07 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இது குறித்து நீதி அமைச்சு தெரிவிக்கையில், மூடப்பட்ட மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியை தற்காலிக சிறைச்சாலையாகப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் நிர்வாக நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகம்

இதேவேளை, பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலையை நிறுவுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலையும் நீதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 54 ஆம் உறுப்புரையில், அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

​நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடிகளைத் தீர்க்க பல்வேறு கொள்கை மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 10,000 கைதிகளைத் தங்க வைப்பதற்கான மேலதிக கட்டுமானப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், வீட்டுச் சிறை வைப்பு (House arrest) தொடர்பான சட்டமூலத்தை உருவாக்குவதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக “சரசவி திரியோ அபிமன்” கல்வி உதவித் திட்டம்: ஜூலை 11-ல் ஆரம்பம்

    July 9, 2026

    மேல் மாகாணத்தில் அதிரடி நடவடிக்கை: போதைப்பொருளுக்கு அடிமையான 239 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிக்கினர்!

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Editors Picks

    பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக “சரசவி திரியோ அபிமன்” கல்வி உதவித் திட்டம்: ஜூலை 11-ல் ஆரம்பம்

    July 9, 2026

    காலி மஹமோதர மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகங்களில் புதிய சிறைச்சாலைகள்! – நீதி அமைச்சர் வர்த்தமானி வெளியீடு

    July 9, 2026

    கல்வித் துறையில் கால்பதிக்கும் ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ்!*

    July 9, 2026

    மேல் மாகாணத்தில் அதிரடி நடவடிக்கை: போதைப்பொருளுக்கு அடிமையான 239 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிக்கினர்!

    July 8, 2026

    பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக “சரசவி திரியோ அபிமன்” கல்வி உதவித் திட்டம்: ஜூலை 11-ல் ஆரம்பம்

    July 9, 2026

    காலி மஹமோதர மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகங்களில் புதிய சிறைச்சாலைகள்! – நீதி அமைச்சர் வர்த்தமானி வெளியீடு

    July 9, 2026

    கல்வித் துறையில் கால்பதிக்கும் ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ்!*

    July 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.