மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நீர் ஏந்து பகுதிகளான மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் நேற்றைய தினம் 117 .5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது அதேபோல் லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் 183.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்க பட்டு உள்ளது.மேலும் சாமி மலை ஓயா மரே ஓயா சியத்தலகங்குல ஓயா காட்மோர் ஓயா சிற்றாறுகள் காட்மோர் நீர் வீழ்ச்சி மோகினி எல்ல நீர் வீழ்ச்சி மறே நீர் வீழ்ச்சி லக்சபான நீர் வீழ்ச்சி களில் அதிக அளவில் வெள்ளம் பாய்ந்த நிலையில் உள்ளது.
இதன் காரணமாக நீர் வீழ்ச்சி பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமலசுரேந்திர நீர் தேக்க தத்தின் நீர் நிரம்பி மதகு வழியாக நீர் வெளியேற்றம் செய்ய படுவதால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மவுஸ்சாகலை காசல்ரீ கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது என் நேரத்திலும் வான் கதவுகள் திறக்கும் நிலை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மஸ்கெலியா நிருபர்.
