பசறை நகரில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு , மின்சார கட்டண உயர்வு, வரி அறவீடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் கொட்டும் மழையிலும் தீப்பந்தம் ஏந்தி பாதாதைகளை சுமந்தவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் மடுல்சீமை செல்லும் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபவணியாக தீப்பந்தங்களை ஏந்தியவாறு பரகொல்ல செல்லும் சந்தி வரை சென்று பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா