ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹாலிஎல போகொட பகுதியில் நீர் வடிந்தோடும் வடிகானில் 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் 8 வயது சிறுமியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் படையினர் பொலிஸார் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இன்று வெள்ளிக்கிழமை சற்றுமுன் 10 வயது சிறுவனின் சடலம் குறித்த பகுதியில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக போகொட கொட்டியாமலுவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வடிகானுக்கு அப்பால் உள்ள வீட்டுக்கு தனது தாய் சென்றுள்ளதாகவும் தாயை அழைத்து வருவதற்காக சென்ற இரண்டு சிறுவர்களும் நீர் வடிகான் ஒன்றை கடப்பதற்கு முற்பட்ட வேளை இன்று பெய்த கனத்த மழையின் காரணமாக வடிகானில் நீர் அதிகளவில் வந்தமையால் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த இரண்டு சிறுவர்களும் போகொட வித்தியாலயத்தில் தரம் ஐந்து மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர்.
வடிகானில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் செருப்பும்இ சாரமும் இ சிறிய கூடை பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஹாலிஎல பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து சிறுவர்களை தேடும் பணிகளில் மிகவும் சிரமத்தின் மத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவர்களின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் குறித்த சிறுவர்கள் இருவரும் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சிறுவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ராமு தனராஜா
