சப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம், எஹலியகொடை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில்

துன்பம் வரும் வேளை துணையிருந்து தடுப்பவனே
நம்பி உன்னைச் சரணடைந்தோம் நன்மைகளைத் தந்துவிடு
அச்சம் அகற்றிவிடு அரவணைப்பைத் தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

பச்சைமயில் மீதமர்ந்து பகைகளைந்து காப்பவனே
எச்சம் ஏதுமின்றி எம்குறைகள் தீர்த்துவிடு
தஞ்சம் கொடுத்துவிடு, தற்காப்பு தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

மலைசூழ்ந்த நகரத்தில் மத்தியிலே இருந்து அருள்பவனே
நிம்மதியைத் தந்தெம்மை நிரந்தரமாய் வாழவிடு
துன்பங்கள் போக்கிவிடு துணையாக இருந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

வள்ளி தெய்வானையரை அருகு கொண்டு ஆள்பவனே
வறுமையைத் தடுத்துவிடு வளமாக வாழவிடு
வாட்டத்தைப் போக்கிவிடு மனமகிழ்வு தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே

எம்முள்ளத்தில் உறைந்திருந்து அருளாட்சி செய்பவனே
உற்றதுணையாயிருந்துவிடு உதவும் மனம் தந்துவிடு
வஞ்சனைகள் தடுத்துவிடு வளங்களையும் தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே
உமையவளின் இளமகனாய் வந்துதித்த பெருமானே
வீரமனம் தந்துவிடு வெற்றியையும் தான் தந்துவிடு
ஆணவத்தை அடக்கிவிடு அன்புநிலை தந்துவிடு
எஹலியகொடை எழுந்தருளும் எங்கள் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
