மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி இம்மாதம் 24 தொடக்கம் 26 வரை கண்டி பிலிமத்தலாவ தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இப்போட்டியில் டயகம , சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் இருந்து இரண்டு மாணவிகள் போட்டியில் பங்குபற்றி இருந்தனர். அவர்களில் தரம் 13ல் கல்வி பயிலும் செல்வி எஸ்.சபிலாஷினி (senior age group,-54-57 weight ) எடை பிரிவில் போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்று தங்கபதக்கத்தை வென்றுள்ளார்.
இவர் இறுதி சுற்றில் கண்டி ஹேமாமாலனி பெண்கள் உயர் பாடசாலை மாணவியுடன் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
அத்தோடு செல்வி பி.தினேஸ்குமாரி என்ற மாணவி ஜூனியர் வயது பிரிவில் (45-48 எடைபிரிவில்) போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இம்மாணவியும் கண்டி ஹேமாமாலனி உயர் பாடசாலை மாணவியுடனே காலிறுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பங்குபற்றிய இவ்விருவருமே பதக்கங்களை சுவீகரித்தனர்.
இம்மாணவிகளுக்கான பயிற்சிகளை வழங்கிய பொக்ஸிங் பயிற்றுவிப்பாளர் (கோச்) S.செபஸ்டிபத்திக்ராஜ் (செபஸ்டியன்) கருத்து தெரிவிக்கையில் தன்னோடு உதவி குத்துச்சண்டை பயிற்சியாளராக திரு.எஸ்.கபிலனும் கடமை கடமைபுரிந்ததாவும் தெரிவித்த அவர் இவ்வாறானதொரு வெற்றி சாதகமாக காரணமாக அமைந்த நுவரெலியா கல்வி வலயத்தில் விளையாட்டு துறைக்குபபொறுப்பான திரு.சுசந்த வீரசேன (3 STAR ⭐⭐⭐ INTERNATIONAL REFFREE,former Vidayartha College Coach) அவர்களின் அவர்களின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் டயகம, சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியின் அதிபர் திரு.கோபால்ராஜ் சேர் அவர்களுக்கும் உதவி அதிபர்களான திரு.வி.மதியழகன் மற்றும் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் அப்பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களுக்கும் பொக்ஸிங் கோச் என்ற முறையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு அம் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இதே பாடசாலையைச்சேர்ந்த செல்வன்.பி.பிரதீப் என்ற மாணவன் 2023 ஆண்டு நடந்த தேசிய ரீதியிலான குத்துச்சண்டை போட்டியில் இரண்டாமிடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை சுவிகரித்தார், அத்தோடு இம் மாணவன் 2020 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இரண்டாமிடத்தைப்பெற்று வெள்ளி பதக்கத்தை சுவீகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
