மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி தாமரவல்லி, அருள்மிகு முருகன் திருக்கோயில்
ஆறுமுகம் கொண்டு அருள் பொழியும் திருமுருகா
ஆறுதலைத் தந்தெமக்கு அருளளிக்க வேண்டுமைய்யா
ஆணவத்தை அடக்கிவிடு, அன்பு மனம் தந்துவிடு
தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்
கரங்கள் பன்னிரண்டு கொண்டு அணைத்தரும் திருமுருகா
கரவில்லா மனத்துடனே வாழவழி வேண்டுமைய்யா
கவலைகளைப் போக்கிவிடு நிம்மதியைத் தந்துவிடு
தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்
கோலமயில் மீதமர்ந்து அருள் வழங்கும் திருமுருகா
கேடுகளைத் தடுத்தெமக்கு அருள் தரவே வேண்டுமைய்யா
கொடு பகையைப் போக்கிவிடு குலமதனைக் காத்துவிடு
தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்
குன்றினிலே கோயில் கொண்டு குறைதீர்க்கும் திருமுருகா
குவலயத்தில் நிம்மதியாய் வாழ அருள் வேண்டுமைய்யா
குற்றங்கள் தந்து விடு
தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்
கணபதியின் இளையோனாய் வந்துதித்த திருமுருகா
கௌரவமாய் நாம் வாழ வழி திறக்க வேண்டமைய்யா
கேடுகள் அண்டாத நிலை தந்து காத்திடைய்யா
தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்
சேவற்கொடி தாங்கி காத்தருளும் திருமுருகா
சோர்வில்லா மனத்தினராய் வாழ வழி தந்திடைய்யா
செய்கருமம் வெற்றிபெற வழிசெய்து காத்திடைய்யா
தாமரவல்லி கோயிலுறை முருகாவுன்னடி சரணம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலை வர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
