ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 2 வது இடத்துக்கு முன்னேறியது.

இடத்துக்கு முன்னேறியது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்ததால் அந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்திருந்தது. மும்பை அணி 5வது தோல்வியை சந்தித்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் தொடர்கிறது.
சிஎஸ்கே தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 10ஆம் திகதி டெல்லி கபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9ஆம் திகதி சொந்த மண்ணில் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.
இறுதி ஓவர்களும் பத்திரனவும்
2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இறுதிக்கட்ட ஓவர்களில் (16 முதல் 20 ஓவர்கள்) சிஎஸ்கேவின் மதீஷ பத்திரன சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இறுதிக்கட்டங்களில் இதுவரை பத்திரன 16.2 ஓவர்களை வீசி 123 ரன்கள் வழங்கி 10 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். 45 டொட் போல்கள் வீசியுள்ளார். சிஎஸ்கேவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டேவும் 10 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். எனினும் அவர், ஓவருக்கு சராசரியாக 12.97 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சிஎஸ்கே கப்டன் தோனி கூறியதாவது: இந்த ஆட்டம் எங்களுக்கு மிக முக்கியமான ஆட்டமாக அமைந்தது. புள்ளிப் பட்டியலைப் பார்த்தாலே இது தெரியும். கடந்த சில ஆட்டங்களாக நாங்கள் எதிர்பார்த்த வெற்றி எங்கள் பக்கம் வரவில்லை. முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக நிற்கிறோம். மதிஷ பத்திரன மிகவும் அருமையாக பந்துவீசினார். இவ்வாறு அவர் கூறினார்.
