நவீன உலகத்திற்கு ஏற்ற முற்போக்கான தொழிலாளர் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்காக பொது மக்களின் கருத்துகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ப்படவுள்ளன, இந்த நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்துவதற்கான செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்கு நேற்று (10) தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்கள உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 0114 22 31 59 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவதன் மூலமோ அல்லது labourreforms@labourmin.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ, தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கான உங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும். தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் இதில் பங்குகொள்ள முடியும்.
இதேவேளை அமர்வில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. கனிஷ்க வீரசிங்கஇ இலங்கை தொழில் நுட்ப மென்பொருள் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் திரு.சானக்க பெர்ணான்டோ பெருந்தோட்டத்துறை தொழில் சங்கங்க கூட்டமைப்பின் பிரதி செயலாளர் நாயகம் திரு.எஸ். முருகையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
