ஐ.சி.சி. 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிக்கான இலங்கை அணியில் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக, திமுத் கருணாரத்ன இப் போட்டிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
திமுத் கருணாரத்ன அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இருந்து வருகிறார்.
எனினும் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வாளர்கள், பல முன்னணி வீரர்களுடன் ஒருநாள் மற்றும் டி:20 கிரிக்கெட்டில் திமுத் கருணாரத்னவுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை.
இந்நிலையில் ஐ.சி.சி. 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்று இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரை இணைத்துக் கொள்ள தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
