பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இராகலை விஜயம்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாணிகர் திருமதி சாரா ஹல்டன் அம்மையார் உத்தியோகபூர்வமற்ற விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு 2023/05/30 ம் திகதி இராகலைக்கு வருகைத்தந்திருந்தார்.

இதன்போது பிரித்தானிய நிதி உதவியின் கீழ் செஞ்சிலுவை சங்கத்தினூடாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தார் .மேலும் பிரித்தானிய நிதியுதவியின் கீழ் செஞ்சிலுவை சங்கத்தினூடாக சென்லேனார்ட் மற்றும் மகா ஊவா தமிழ் வித்தியாலயங்களில் மேற்கொண்டு வரும் சுகாதார மற்றும் உணவு வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து மாணவர்களுடன் மகிழ்ந்துரையாடினார்.

இந்நிகழ்வு நுவரெலியா செஞ்சிலுவை சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இராகலை செஞ்சிலுவை பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
