இன்று(08/07/2023) எனது தாய் கல்லூரியான மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் (தேசிய பாடசாலை) 83 வது கல்லூரி தினமாகும் (1940-2023), அழகிய மத்திய மலை நாட்டில் மஸ்கெலியா நகரில் அமைந்துள்ள எமது தாய் பாடசாலை பல்வேறு சாதனைகளை புரிந்து தொடர்ந்தும் சமூகத்திற்கு சேவையாற்றி வருகின்றது. ஹட்டன் வலய பாடசாலைகளில் கோட்டம் மூன்றின் மத்தியில் அமைந்துள்ள எமது கல்லூரி தொடர்ந்து சமுகத்திற்கு சேவையாற்ற எமது வாழ்த்துக்கள்.
மஸ்கெலியா பிரதேச சபைக்குற்பட்ட எமது பாடசாலையை சுற்றி அண்ணளவாக ஐந்து நகரங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தேயிலை தோட்டங்களும் அழகே காணப்படுகின்றன. சுற்றியுள்ள மாணவர்கள் தமது கல்வி தேவைகளை நிறைவு செய்ய எமது பாடசாலைக்கு அதிகம் வருவதோடு, எமது பாடசாலையில் கல்வி கற்று பல்வேறு துறைகளில் பலர் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆரம்பம் முதல் இன்றுவரை கடைமையாற்றி சிறந்த மனிதர்களை உருவாக்கிய அனைத்து அதிபர், ஆசிரியர்களையும் இத்தருணத்தில் நன்றிகூறி நினைவு கூறுகின்றோம்.
தற்போதைய பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனைத்து பழைய மாணவர்கள் சார்பாகவும் பழைய மாணவர் சங்கம் மூலமாக 83 வது கல்லூரி தின வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறபோடப்பட்ட எமது பாடசாலை பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையை இந்த வருடத்தில் ஆரம்பிக்க எத்தணித்துள்ளோம் என்ற செய்தியையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம். எமது பழைய மாணவர் சங்கத்தின் இணையத்தளம் (Web page) ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டமும் நடந்து கொண்டிருக்கின்றன. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தை அடையாளப்படுத்த பொதுவான T.Shirt திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த திட்டம் வாயிலாக பெறப்படும் நிதியில் கல்விக்கான திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம். எமது பாடசாலை வளர்ச்சிக்கும் மலையக கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்தும் பழைய மாணவர்களை இணைத்து கொண்டு திட்டங்களை வகுத்து முன்னோக்கி செயற்பட நாம் தயாராகவுள்ளோம் .
நன்றி
ச.ஹெரோஸன் குமார்.
செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்
தகவல்
ச.சதீஷ்குமார்
மஸ்கெலியா
