2023 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தொழிற்பயிற்சி பாட நெறிகளுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளல் இவ்வாரம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாடுப்பூராகவும் காணப்படும் 56 பயிற்சி மத்திய நிலையங்களுக்கு தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு இவாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2023 ஆண்டின் இரண்டாவது பாதி பிரிவின் பாடநெறிகளுக்காக நாடுப்பூராகவும் காணப்படும் 56 பயிற்சி மத்திய நிலையங்களில் 35 முழுநேர பாடநெறிகளுக்கும் 72 பகுதி நேர பாடநெறிகளுக்கும் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இத்தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்கு 15-25வயதிற்கு இடைப்பட்டவர்கள் கிழமை நாட்களில் நடைபெறும் முழுநேர பாடநெறிகளுக்கும் 15-35 வயதிற்குட்பட்டவர்கள் வாரயிறுதி நாட்களிலும், கிழமை நாட்களில் மாலை வேலைகளிலும் நடைபெறும் பகுதி நேர பாட நெறிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும்.மாணவர்களின் திறன்களின் அடிப்படையில் தேசிய தொழிற்தகமை( NVQ) 2,3,4,5ஆகிய மட்டங்களில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாநெறிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு உளவியல் ஆரோக்கியம் தொடர்பாக உளவியல் ஆலோசனைகள் “வார பாசறை “என்ற அடிப்படையில் புதியதொரு எண்ணக்கருவும் இலவசமாக நடைமுறைப்படுத்த படவுள்ளதுடன் ஒரு வருடத்திற்கு சுமார் 25000 தொழில் வான்மையாளர்களை சமூகத்திக்கு உருவாக்கித்தருவதின் மூலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொழிற்பயிற்சி யுகத்திற்கான பாரியதொரு பங்களிப்பனை வழங்கி வருகிறது.
தகவல்.
S.சிவராஜா(அறிவிப்பாளர்-தமிழ் )
ஊடகப்பிரிவு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்