Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

July 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அட்டுலுகம சிறுமி கொலை -சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் எடுத்த நடவடிக்கை
Breaking

அட்டுலுகம சிறுமி கொலை -சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் எடுத்த நடவடிக்கை

ThanaBy ThanaDecember 16, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சர்ச்சைக்குரிய அட்டுலுகம சிறுமி கொலை  சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் எடுத்த அதிரடி நடவடிக்கை.

பாணந்துறை – அட்டுலுகம பகுதியில் சேற்று நிலத்திற்குள் புதைத்து, மொஹமட் ஹக்ரம் பாதீமா அயேஷா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

பாணந்துறை மேல் நீதிமன்றத்தில், சட்ட மாஅதிபர் இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துறை – பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கடந்த மே மாதம் 27ம் திகதி சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியிலுள்ள சேற்று நிலத்திற்குள் புதைத்து, இந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

சேற்று நீர், நுரையீரலுக்குள் சென்றமையே, சிறுமி உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனையிலிருந்து தெரியவந்தது.

இந்த நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த பள்ளி குட்டி என அழைக்கப்படும் பாஃரூக் மொஹமட் என்ற சந்தேகநபர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக சட்ட மாஅதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என கருதி, நீதவான் நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்யாது, நேரடியாக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    வத்தளை துப்பாக்கிச் சூடு: தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடம் தீவிர விசாரணை!

    July 25, 2026
    Editors Picks

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.