இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு ஆதார வைத்தியசாலைபில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சுகயீனம் உற்ற நிலையில் பரீட்சைக்காக நேற்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நாளை இவ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் பணித்துள்ளது.
ஆனால் இம்மாணவனுக்கு மீண்டும் கொழும்பிலிருந்து கொட்டகலைக்கு பிரயாணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு பொருத்தமான சூழ்நிலை நிலை காணப்படாத நிலை பற்றி வகுப்பாசிரியர் மற்றும் மாணவனின் தாய் ஆகியோர் நுவரெலியா கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கலவிப் பணிப்பாளர் தேசபந்து எஸ்.செல்வராஜா அவர்களிடம் விடயத்தை கூறினர்.
அவர் உடனடியாக பரீட்சைத் திணைக்கள பரீட்சை ஆணையாளர் திருமதி ஜீவராணி புனிதா அம்மையாருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொண்டதற்கும் தேவையான சகல ஆவணங்களும் அவருக்கு புலணம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதற்கும் அமைவாக பரீட்சை ஆணையாளர் திருமதி.ஜீவராணி புனிதா அம்மையார் குறித்த மாணவன் இன்றைய தினம் தற்காலிகமாக வசிக்கும் தமது உறவினர் வீட்டுக்கு அருகிலுள்ள கொழும்பு இசிப்பத்தான வித்தியாலயத்தில் பரீட்சை எழுதுவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
– ரா.கவிஷான் –