இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதியின் லெல்லுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இரத்தினபுரி நோக்கி பயணித்த கெப் வாகனத்துடன், பெல்மடுல்ல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு பிள்ளை உட்பட மூவர் படுகாயமடைந்தள்ளனர்.
அவர்கள் தற்சமயம் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
