ஹோல்புறூக் ரிபப்லிகன் சர்வதேச பாடசாலையினால் (Republican International School) காகித உறைகள் பொது வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பு.
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பகுதியில் கடந்த பன்னிரண்டு வருடங்களாக இயங்கி வரும் ரிபப்லிகன் சர்வதேச பாடசாலையின் மாணவர்களும் காரியாலய உத்தியோகத்தர்களும் மற்றும் ஆசிரியர்களும் இணைந்து பாவித்த காகிதாதிகளை உபயோகித்து காகித உறைகளை தயாரித்துள்ளனர்.
மருந்து வில்லகைள் மற்றும் குளிசைகளை பயனாளிகளுக்கு பகிர்வதற்கு வசதியளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி காகித உறைகள் அக்கரப்பத்தனை மற்றும் டயகம பொது வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவினர் இன்று காலை அக்கரப்பத்தனை மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து மாவட்ட வைத்திய அதிகாரியி;டம் ஆயிரம் காகித உகைள் அடங்கிய அன்பளிப்பு பொதியினை கையளித்துள்ளார்கள்.
மேலும் டயகம பிரதேச பொது வைத்தியசாலைக்கு மேற்படி குழுவினர் இன்று விஜயம் செய்து ஆயிரம் காகித உறைகள் அடங்கிய அன்பளிப்பு பொதியினை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.
வைத்திய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் மேற்படி செயற்பாட்டினை பெரிதும் வரவேற்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதேவேளை பிரதேசத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கும் காகித உறைகள் வழங்கிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மாணவர்களிடம் மீள்பாவனை மற்றும் வாழ்க்கைத்திறன்களை வளர்ப்பதற்கு மட்டுமல்லாது சுற்றாடல் பராமரிப்பு தொடர்பான ஆற்றல்களையும் இரசணைகளையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயயற்றிட்டத்தின் ஊடாக பிரதேச வைத்தியாலகளுக்கு தவணை இறுதிக்குள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காகித உறைகளை வழங்கிவைப்பதற்ககான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் பாடசாலை அதிபர் திரு.நல்லதம்பி முத்துக்குமார் அவர்கள் எமக்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிரதேசத்தில் ஆங்கில மொழி மூலமாக முறையானதும் தரமானதுமான கல்வியினை வழங்கி மாணவர்களின் முழுமையான ஆளுமை விருத்திக்கான செய்ற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் தரமான நிறுவனமாக பாடசாலையினை வழிநடாத்திச் செல்வதற்கு பாடசாலைச் சமூகம் வழங்கிவரும் பாரிய ஒத்துழப்புகளுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவத்துக்கொள்வதாகவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

