மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.24.08.2023.
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் நேற்று நோர்வூட் பொலிஸ்சார் கைது செய்து உள்ளனர்.
இவ்வாறு கைது செய்ய பட்ட ஆசிரியர் 8 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து உள்ளதாக அவர் கற்பிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு வழங்கிய தகவலின் படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக குற்றத்தடுப்பு பிரவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்ய பட்ட ஆசிரியர் கடந்த காலத்தில் இவ்வாறான குற்ற செயளில் ஈடுபட்டு வந்தவர் என தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளார் என அந்த அதிகாரி கூறினார்.

