நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூட்டாவத்தை கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு மாதுளாவத்தை பகுதிக்கு பவணி சென்ற தேர். மாதுளாவத்தையில் இருந்து மீண்டும் பூட்டாவத்தை பகுதியில் அமைந்துள்ள ஆலயத்திற்கு திரும்புகையில் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சையின் பின்னர் குறித்த மூவரும் இன்றைய தினம் வீடு சென்றதாக பசறை வைத்தியசாலையில்
உயர் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்விரத பவணியை இழுத்து சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியான 36 வயதுடைய பசறை அம்பத்தன்ன 2 ம் கட்டை பகுதியை சேர்ந்த நபர் நமுனுகுலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 31 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா

