பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் இருந்து எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆறுக்க 9 வளைவு பாலத்திற்கு அருகாமையில் புகையிரதத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த புகையிரதத்தில் வெள்ளவாய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதி ஒருவரும் எல்ல கரந்தகொல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் புகையிரத மிதிப்பலகையில் சென்ற வேளையிலேயே 21 வயதுடைய இளைஞர் கீழே தவறி விழுந்து. பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காயமடைந்த இளைஞரை புகையிரத அதிகாரிகள் குறித்த புகையிரதத்தில் ஏற்றிக் கொண்டு எல்ல புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காயமடைந்த இளைஞரை புகையிரத நிலைய அதிகாரிகளில் உடனடியாக தெமோதர வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டு. வைத்திய சாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இளைஞரும் யுவதியும் காதலர்கள் எனவும் இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
