கொழுப்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நச்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள 800 திரைப்படத்தில் நடித்த இலங்கை கலைஞர்களை சந்திக்கும் நிகழ்வு கொழுப்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.
இதன் போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மை நிலையே திரைப்படடமாக உருவாகியிருக்கின்றது என்று குறிப்பிட்ட முரளி என் வாழ்க்கையில் எத்தனை சங்கடங்களை சந்தித்து கிரிக்கெட்டில் வெற்றிபெற முடிந்ததோ அதே போலவே என் வாழ்க்கை திரைப்படமும் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வெளிவந்திருக்கின்றது என்று குறிப்பிட்ட அவர் ,நான் இந்த இடத்தில் இப்படி இருக்க காரணம் இந்த நாட்டில் வசிக்கின்ற மூன்று இன மக்களின் அன்பும், ஆதரவும் தான் காரணம் என்றார் ,கிரிக்கெட்டில் பல்வேறு சங்கடமான நிலைமைகளில் அப்போதைய தலைவர் அருஜுன ரணதுங்க ஒரு அப்பா போல எனக்கு பக்கபலமாக இருந்தார் என குறிப்பிட்டார்.


