பதுளை மாப்பாகலை தமிழ் வித்தியாலயத்தில் 5 வருடங்களுக்கு பிறகு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் செல்வன் P. துஷிந்தன் 152 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
குறித்த மாணவர் கடந்த 25.09.2023 ம் திகதி அன்று மாப்பாக்கலை தோட்ட லயன் குடியிருப்பில் தீயினால் எரிந்த வீடொன்றில் வசித்து வந்த மாணவர் ஆவார்.
பது/ மாப்பாக்கலை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சூ.ஜோதிகண்ணன் மற்றும் மாணவனுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி பிரியந்தி அவர்களுக்கும் பெற்றோர்களும் மாணவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
ராமு தனராஜா

