பலத்த மழையால் நில்வலா கங்கை மற்றும் களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அந்த ஆறுகளை அண்மித்து வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தினால் தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ இடைமாறலின் வெலிகம முதல் கனங்கே வரையான பகுதியில் இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
