Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

August 12, 2026

சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகளை வழங்குவதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 21 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுகிறது…
இலங்கை

முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகளை வழங்குவதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 21 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுகிறது…

ThanaBy ThanaJanuary 8, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகளை வழங்குவதன் மூலம் அடுத்த 3 வருடங்களில் 21 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளது. இதன்படி, காணிகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தில் மாத்திரம் 9 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அதிகாரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இக்காணிகள் பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் அடிப்படையிலும் நீண்ட கால குத்தகை அடிப்படையிலும் திட்ட வாய்ப்புகளுக்காக வழங்கப்படுகின்றன.

இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ், மேல், தெற்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 60க்கும் மேற்பட்ட திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 24 திட்டங்களுக்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள்ன.

கொழும்பு கோட்டை, வரகாபொல, காலி கோட்டை, அவிசாவளை, தலவத்துகொட, கொட்டாவ, ஏகல, கண்டி, நாரஹேன்பிட்டி, நாவலப்பிட்டி, பலாங்கொடை, கொலன்னாவ, வெள்ளவத்தை, பாதுக்க ஆகிய பிரதேசங்களில் அந்தந்த திட்டங்களுக்கு உரிய காணிகள் அமைந்துள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய வீட்டுத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், பல மாடி வாகனம் நிறுத்துமிடங்கள், அலுவலக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள், பொழுதுபோக்கு, சுகாதாரம், கல்வி, கைதொழில்கள் என்று இத்திட்டங்கள் துறைவாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தில் இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 2 திட்டங்களுக்கு அரச மற்றும் தனியார் பங்காளித்துவ அடிப்படையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக சமர்ப்பிக்கப்படும் செயற்திட்டங்களுக்கு 09-120 நாட்களுக்குள் அங்கீகாரம் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றையும் அமைத்துள்ளது. அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் இருந்து விரைவாக தொடர்புடைய அனுமதிகளை வழங்குவதற்கான ஒரு சேவைப் பிரிவான One Stop Unit ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026
    Editors Picks

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.