மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.01.2024.
நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நல்லதண்ணி நகரில் இன்று அதிகாலை மேற் கொண்ட சோதனையின் போது வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய ஹெட்டி ஆராச்சிகே ஷமிந்த என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ள சந்தேக நபரிடம் இருந்து சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட 1000/= நாணய தாள்கள் 11ம் 500/= தாள் ஒன்றும் கைப்பற்ற பட்டு உள்ளது எனவும் இவரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
மேலும் இவருடன் வேறு நபர்கள் சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட நாணய தாள்களுடன் நல்லதண்ணி நகரில் உள்ளனரா என புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
