ஏறாவூர் ஹிரா முன்பள்ளி பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று முகம்மட் நிப்றாஸ் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ்வருடம் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 20 மாணவர்களுக்கு இவ்வருடம் பாடசாலை செல்லும் மாணவர்களால் மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்றதோடு, வருகை தந்த அதிதிகளினால் இனிப்புப் பண்டமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரனை அதிகாரி நஸீர் ஹாஜியார், ஏறாவூர் நகர பிரதேச செயலக முன்பள்ளி பாலர் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சர்மிளை ஹானு, கவிஞர் அமீன், உட்பட பாடசாலையின் ஆசிரியைகளான றிபாயா, சஜீறா, பர்சானா, மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, நிகழ்வில் கலந்து கொண்ட அதிதி திடீர் மரண விசாரனை அதிகாரி நஸீர் ஹாஜியார் அவர்கள் முன்பள்ளி மாணவர்களின் ஆரம்ப கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக அயராது பாடுபடும் ஹிரா முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்கு பெற்றோர்களும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் மாணவர்களை உரிய நேரத்திற்கு அனுப்பி வைப்பதோடு மாணவர்களின் விடயங்கள் தெடர்பில் ஆசிரியைகளுடன் தொடர்புகளை பேணி அவர்களின் செயற்பாடுகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என்றும் மாணவர்களின் ஆரம்ப கல்வியானது மிகவும் சிறப்பாக இடம் பெறுமாயின் அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றியமைக்க வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.



