மஸ்கெலியா பல நோக்கு ச கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று) பௌர்ணமி நாளில் நல்லதண்ணி வழியாக செல்லும்- சிவனடி பாத மலை வீதியின் இருபுறங்களிலும் யாத்திரிகர்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக் வெற்று போத்தல்கள் உட்பட மக்காத திண்மக் கழிவுகளை அகற்றும் முயற்சியை மேற்கொண்டனர்.
நல்லதண்ணி – சிவனடி பாதமலை வீதியில் சீதகங்குள பிரதேசத்தில் நல்லதண்ணி வரை இந்த சிறமதானம் மேற்கொள்ளப்பட்டு, சேகரிக்கப்பட்ட குப்பைகள் மஸ்கெலியா பிரதேச சபையின் நல்லதண்ணியில் அமைந்துள்ள குப்பை சேகரிப்பு நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக மஸ்கெலியா கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்தார்.
மஸ்கெலியா கூட்டுறவு சங்கத்தின் உப தலைவர் சாகர ஜயலத் அவர்களுடன் கூட்டுறவு சங்கத்தின் அனைத்து பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் இணைந்து இந்த சிரமதானத்தில் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.25.03.2024.

