போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி பெறும் நபர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவிக்கின்றது.
இது தொடர்பான சுற்றறிக்கை சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்தின தெரிவித்தார்.
நலன்புரியைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பூரணமாக அல்லது பகுதியளவில் அல்லது போலியானதாக தகவல்கள் உறுதியாகு மிடத்து அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு 2002ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சபை சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
போலியான தகவல்களை வழங்குதல் தொடர்பாக அறிவிக்கப்பட்டால் அதிகாரிகள் குழு ஒன்றினால் மூலம் விசாரணைகளை நடாத்துவதற்கு மாவட்ட செயலாளருக்கு அல்லது மேலதிக நலன்புரி நன்மைகள் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்விசாரணைகளில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் பொய்யாக அல்லது வேண்டுமென்றே முன்வைக்கப்பட்டுள்ளதா என வழங்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கேற்ப ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுடன் அதன் பெறுபேறுகளை தனக்கு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு தலைவர் வலியுறுத்தினார்.
போலியான தகவல்களின் அடிப்படையிலே நலன்களை பெறுவதாக உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பயனாளி பெறவில்லையாயின் பட்டியலில் இருந்து நீக்குதல், தற்போது நலன்புரியைப் பெறுபவராயின் அதை இடை நிறுத்துதல், மீளப்பெறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
