பதுளை பேருந்து தரிப்பிடத்தில் பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி நபர் ஒருவர் பலத்த காயமடைந்து பதுளை போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயதுடைய ஹப்புவத்த பதுளை பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு காயமடைந்து உள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தின் சாரதி பதுளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
