இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி 17 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 76 ஓட்டங்களை பெற்றதுடன், Axar பட்டேல் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் கேசவ் மகாராஜா மற்றும் அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 169 ௐட்டங்களை பெற்ற நிலையில், தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கால்சென் அதிகபடியாக 52 ஓட்டங்களையும்குயின்டன் டீ கோக் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 03 விக்கெட்டுக்களையும், அர்ஸதீப் சிங் மற்றும் புப்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி இந்திய அணி தென்னாபிரிக்க அணியை 07 ஓட்டங்களால் வீழ்த்தி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிண்ணத்தை வென்றுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து தனது ஓய்வை விராட் கோலி இன்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
