டி சந்ரு திவாகரன்
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியை மீண்டும் திறப்பதற்கே குறித்த நாடகம்.
கடந்த வருடங்களில் அதிகமான உயிர்களைக் காவு கொண்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியினை திறப்பதற்கே குறித்த போராட்டம் என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றன.
இரண்டு குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தனியார் பேருந்துக்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன இதன் காரணமாக அதிகமாக பொது மக்கள் பாதிக்கப்படுகின்றன.
குறித்து இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தனியார் பேருந்து சாதிகளும் நடத்துனர்களும் நேற்றைய தினம் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபட்டு வந்த சொகுசு பேருந்துகளை நிறுத்தி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி குறித்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதற்கு இடையூறாக இருந்துள்ளனர் இதன் காரணமாக இன்றைய தினம் சொகுசு பேருந்துக்களும் சேவையில் இருந்து விலகி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .
நேற்றைய தினம் லிந்துலை மற்றும் தலவாக்கலை பகுதிகளில் சொகுசு பேருந்துக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் சம்பவம் இடம்பெற்ற போது இதற்கு பொறுப்பான அதிகாரிகள் எவரும் கண்டு கொள்ளாமல் ஒரு அசமந்த போக்கில் இருந்ததாகவும் குறித்த சொகுசு பேருந்தில் பயணித்த பயணிகளும் பொதுமக்களும் குற்றம் சுமத்துகின்றன.