நுவரெலியா பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனம்(P.H.D) ஊடாக வாய்வழி புற்றுநோய் பரிசோதனை மற்றும் குழந்தை பல் பராமரிப்பு நிகழ்ச்சிகள் 2024.10.18 & 2024.10.19 ஆகிய திகதிகளில் பெர்ன்லேண்ட் தோட்டத்தில் நுவரெலியா பிராந்திய பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.ராந்தேனி அவர்களால் நடத்தப்படுகின்றது.
இன்றை தினம் ஆரம்பமாகும் இந்த பற் பரிசோதனை மற்றும் தெளிவூட்டல் நிகழ்வில் அத் தோட்டத்தைச் சேர்ந்த கயிப்புகொளை,எரோ மேற் பிரிவு,எரோ கீழ் பிரிவு,பெலேண்ட் ஆகிய நான்கு பிரிவுகளில் உள்ள 3700 மக்கள் நன்மையடைவர்.
இத் தெளிவூட்டல் நிகழ்வால் எதிர் காலத்தில் வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் முகமாக பாடசாலை மாணவர்கள் குழந்தைகள் மற்றும் முதியோர் வரை தெளிவான விளக்கம் வழங்க படுகின்றன.
கெளசல்யா