அங்குலான கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘டோரா’ (Dora) ரகப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தகவல் கிடைத்த உடனடியாக, கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கின. கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக விமானப்படையின் Mi-17 மற்றும் Bell 412 ஹெலிகொப்டர்கள் உடனடியாகப் பயன்படுத்தப்பட்டன.
விபத்தில் சிக்கிய கடற்படையைச் சேர்ந்த 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, காணாமற்போயுள்ள மேலும் ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
