கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை!
அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை நோக்கி நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள திடீர் கசிவு காரணமாக, சில பகுதிகளில் இன்று (05) நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு 8.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது:
மொரகஸ்முல்ல
இராஜகிரிய
நாவல
ஒபேசேகரபுர
கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள்
மேற்படி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நீர் விநியோகத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.
