Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ‘கூத்தாடி’ குரல்! இலங்கைத் திரைப்படத்தைப் பாராட்டித் தள்ளிய ஆஸ்திரேலிய அமைச்சர்!
இலங்கை

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ‘கூத்தாடி’ குரல்! இலங்கைத் திரைப்படத்தைப் பாராட்டித் தள்ளிய ஆஸ்திரேலிய அமைச்சர்!

ThanaBy ThanaJune 12, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ‘கூத்தாடி’ குரல்! இலங்கைத் திரைப்படத்தைப் பாராட்டித் தள்ளிய ஆஸ்திரேலிய அமைச்சர்!*

(சாந்தன்)

 

இலங்கைத் திரைத்துறையின் அசாத்தியப் படைப்பான ‘கூத்தாடி’ திரைப்படம், சர்வதேச எல்லையைத் தாண்டி ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் வரை ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் கட்டிப்போட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியப் பிரதமரின் அமைச்சரவைச் செயலாளரும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான உதவி அமைச்சருமான மாண்புமிகு Dr. ஆண்ட்ரூ சார்ல்டன் (Hon Dr Andrew Charlton MP – Member for Parramatta, Australian Labour Party) அவர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்து, படக்குழுவினரை மனதாரப் பாராட்டி கௌரவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சியின் முக்கியப் புள்ளியாக விளங்கும் அமைச்சர் Dr. ஆண்ட்ரூ சார்ல்டன், கலை மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பவர். அந்த வகையில், தயாரிப்பாளர் செல்வின் தாஸ் அவர்களின் அசாத்திய தயாரிப்பில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவான ‘கூத்தாடி’ திரைப்படத்தை அவர் பிரத்யேகமாகப் பார்வையிட்டார்.

 

திரைப்படம் நிறைவடைந்ததும், படத்தின் ஆழமான திரைக்கதை, தொழில்நுட்ப நேர்த்தி மற்றும் கலைஞர்களின் உழைப்பைக் கண்டு வியந்த அமைச்சர், தயாரிப்பாளர் செல்வின் தாஸ் மற்றும் படக்குழுவினருக்குத் தனது உயரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கௌரவித்தார்.

 

ஆஸ்திரேலிய அமைச்சரின் பாராட்டைப் பெற்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள ‘கூத்தாடி’ திரைப்படம், எதிர்வரும் 19ம் திகதி இலங்கை முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

 

உலகத் தலைவர்களையே வியக்க வைத்துள்ள இத்திரைப்படத்தைக் திரையரங்குகளில் காண்பதற்கு இலங்கை சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் குதூகலமும் ஏற்பட்டுள்ளது.

 

“இலங்கைத் திரைத்துறையின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள ஒரு காவியம்” எனப் பார்க்கும் அனைவராலும் ‘கூத்தாடி’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு சர்வதேச அரசியல் தலைவர், அதுவும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சபையின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், இந்த இலங்கைத் திரைப்படத்தைத் தேடிப் பார்த்துப் பாராட்டியிருப்பது ஒட்டுமொத்த இலங்கைத் திரைத்துறைக்கே கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது.

 

தயாரிப்பாளர் செல்வின் தாஸ் அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான இந்த முயற்சிக்கு, உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களிடம் இருந்தும், ஊடகங்களிடம் இருந்தும் தற்பொழுது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

* சாந்தன்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    வத்தளை துப்பாக்கிச் சூடு: தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடம் தீவிர விசாரணை!

    July 25, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.