2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk
என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும்.
