கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போத்தலாப்பிட்டிய பாத்திமா காடன் பகுதியில் அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க்கப்பட்டது.
திடீரென அந்த பகுதியில் உள்ள மக்கள் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கம்பளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்,
சுமார் 48 வயதான நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பிரதேசத்தில் வசித்து வந்த ஆணின் சடலம் திடீரென கம்பளை மகாவலி ஆற்றில் மீட்க்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,
க.யோகா
