ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில்…
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.
‘2025 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியிருந்தனர்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும். 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டிடங்களில், பாதுகாப்புப் பிரிவினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்துள்ளனர்.
இருப்பினும், இந்த அதிகாரிகளில் எவரும் ஜனாதிபதி மாளிகைகளை தங்குவதற்காக பயன்படுத்தவில்லை.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-25
