Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

August 13, 2026

மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

August 13, 2026

Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!
மலையகம்

இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

ThanaBy ThanaAugust 13, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் எந்தவொரு முயற்சியையும் மலையக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாக, அதன் உப தலைவரும் பதுளை மாவட்ட அமைப்பாளருமான பகி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் பலாங்கொட ப்ளான்டேஷனுக்கு உட்பட்ட இறப்பர் உற்பத்தி பெருந்தோட்டங்களின் சில பிரிவுகளான, இங்குருகமுவ மற்றும் பசறை ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கவோ அல்லது தனியார்மயப்படுத்தவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவே அவர் இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்புப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார உரிமைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தொழில் பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்கும் என்று பகி பாலசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக மலையக தொழிலாளர் முன்னணி சார்பில், பதுளை தொழில் திணைக்களத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் வலியுறுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் பெருந்தோட்டங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கையைக் கைவிட்டு, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எத்தகைய தனியார்மய முயற்சியையும் உறுதியுடன் எதிர்ப்பதுடன், தேவையேற்படின் அனைத்துத் தொழிற்சங்க மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பகி பாலசந்திரன் தனது ஊடக அறிக்கையின் மூலம் எச்சரித்துள்ளார்.

[செய்தி சேகரிப்பு:] இந்தச் செய்தியை நம்முடன் பகிர்ந்துகொண்டவர் நடராஜா மலர்வேந்தன்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! – பா.உ ஜீவன் தொண்டமான்.

    August 13, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026
    Editors Picks

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026

    இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

    August 13, 2026

    இங்குருகமுவ மற்றும் ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது – பகி பாலசந்திரன் எச்சரிக்கை!

    August 13, 2026

    மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு.

    August 13, 2026

    Clean Sri Lanka ஜனாதிபதி செயலணி கூடியது

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.