நடப்பு ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 113,307 (ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 307) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 25,355 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 22 சதவீதமாகும்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 12,738 பேரும், பிரான்ஸிலிருந்து 8,106 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி முதல் ஓகஸ்ட் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 56 ஆயிரத்து 725 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் இந்தியாவிலிருந்து 363,585 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 143,139 பேரும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
