உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான மிகச் சிறந்த இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களின் எதிர்காலத்தைப் பொன்னாவதாக மாற்றிக்கொள்ளுங்கள்!
விண்ணப்பிக்கக் கடைசித் திகதி: 2026 செப்டம்பர் 27 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படைத் தகுதிகள்
* உயர்தரப் பரீட்சை: 2023, 2024 அல்லது 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் குறைந்தது 3 பாடங்களில் S சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
உயர்தர அல்லது சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது S சித்தி பெற்றிருத்தல் அவசியமாகும்.
* பொதுச் பரீட்சை: Common General Test (பொதுச் சாதாரண பரிட்சை) இல் குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
* வயது எல்லை: 2026.09.27 அன்று 25 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் இலங்கையின் 16 முன்னணிப் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை மாணவர்கள் தொடர முழுமையான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* ⚙️ பொறியியல் தொழில்நுட்பம் (Engineering Technology)
* 💻 தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
* 🔬 அறிவியல் (Science)
* 📈 வணிகம் (Business)
* 📚 மனிதநேயம் மற்றும் கலை (Humanities & Arts)
உள்ளிட்ட பல்வேறு துறைசார் உயர்கல்வியைத் தொடரத் துடிக்கும் மாணவச் செல்வங்களுக்கான பொன்னான தருணம் இது!
தகுதியுடைய மாணவர்கள் தாமதிக்காமல் உடனடியாக விண்ணப்பித்து உங்கள் உயர் கல்வி கனவை நனவாக்குங்கள்!
மேலதிக விபரங்களுக்கு https://mohe.gov.lk இணையத்தை நாடவும்
#HigherEducation #InterestFreeLoan #SriLanka #MalayagamNews #StudentOpportunities #DegreeProgram
