இலங்கைத் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவுறுத்தல்
நேபாளத்தில் நிலவி வரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக, அங்குள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அறிவுறுத்தல்: அபாயகரமான பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் இலங்கையர்கள் உடனடியாகத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை முறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதிப்புகள் எதுவும் இல்லை: இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த பேரழிவினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை எனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
24 மணி நேர அவசர உதவி எண்கள்: ஏதேனும் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைப்படும் இலங்கையர்கள் பின்வரும் தொடர்புகளைப் பயன்படுத்தலாம்:
தொலைபேசி இலக்கம்:
+977 9851048653
