
மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய 16 வயதுடைய அவரது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
