உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன்
ஊடகவியலாளரும், சமாதான நீதிவானும், மலையோரம் செய்திகள் சேவையின் நிறுவனர் மற்றும் முகாமையாளருமான (Founder & CEO – Malaiyoram News) தேசபந்து பா.பாலேந்திரன் அவர்கள், Binzo Digital Campus ஊடாக முன்னெடுக்கப்பட்ட Diploma in Psychology and Counselling கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்து, தனது கல்விப் பயணத்தில் மேலும் ஒரு உயரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று செப்டம்பர் 12ஆம் திகதி, கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், குறித்த கற்கைநெறிக்கான சான்றிதழை அவர் பெற்றுக்கொண்டார்.
ஊடகப் பணியையும் சமூகப் பணியையும் முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, கல்வியையும் தொடர்ந்து தனது பயணத்தின் முக்கிய அங்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பா.பாலேந்திரன் அவர்கள், அறிவைத் தேடி கற்றலைத் தொடர்வதன் மூலம் தனது அறிவாற்றலையும் தகைமையையும் மேலும் மேம்படுத்தி வருகிறார்.
கல்வி என்பது வயதோடு முடிவடையும் ஒன்றல்ல என்பதை எடுத்துக்காட்டும் வகையில், தனது சமூக மற்றும் ஊடகப் பணிகளுக்கு மத்தியில் புதிய துறையொன்றில் கல்வியைத் தொடர்ந்து, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது பாராட்டுக்குரிய சாதனையாகும்.
உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் பெற்றுள்ள இத்தகைமை, எதிர்காலத்தில் சமூகத்திற்கான அவரது பணிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்விப் பயணத்தில் மேலும் பல உயரங்களைத் தொட்டு, தனது அறிவாலும் ஆற்றலாலும் சமூகத்திற்கு பயனுள்ள பல்வேறு பணிகளை முன்னெடுத்து, பல தலைமுறைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என எமது செய்தி சேவை சார்பில் தேசபந்து பா.பாலேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறோம்
