டி சந்ரு
நானுஓயாவில் இருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால தொடரூந்து பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நானுஓயா பிரதான நகரில் வைத்து ஊடகங்ளுக்கு தெரிவித்தார்.
இதன் போது ரதெல்ல குறுக்கு வீதியை கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்க கோரி ஒரு தரப்பினர் வலியுறுத்தியபோது அதனை மறுத்த அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது வீதியில் வீதி விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்து இவ்வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிப்பது நன்மை பயக்கும் எனவும் . இவ்விடயம் தொடர்பாக இவ்வீதி தொடர்பாக எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது முக்கிய கவனம் செலுத்தி நிரந்தர முடிவு எடுக்கப்படும் , அதுவரை நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் மேலும் தெரிவித்தார் .
