களுத்துறை -புதியவானம் நடத்திய விருது வழங்கும் விழா இங்கிரிய றைகம் கீழ்ப்பிரிவு விபுலானந்தா தமிழ் வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு புதிய வானதின் பணிப்பாளர் மணிஸ்ரீகாந்தன் தலைமையில் கடந்த 18.06.2023 அன்று இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதேசத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சமூகசெயற்பாட்டாளர்கள்,கல்வியலாளர்கள் ,கலை ,இலக்கியம் சார்ந்தவர்கள்,ஆன்மீகம் சார்ந்தவர்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
பூமணி அம்மாள் அறக்கட்டளை ,சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் ,மலையக தேன்மொழி மக்கள் சேவை ,அகலவத்தை கணபதி அறநெறிப்பாடசாலை அனுசரணைகளை வழங்க நிகழ்வுக்கான இணைய ஊடக அனுசரணையை மலையகம்.lk வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.விருதுபெற்ற அனைவருக்கும் மலையகம் .lk சார்பாக வாழ்த்துக்கள்.

